வவுனியாவில் மகனை தே டிய தந்தை மரத்திலிருந்து கீழே வீழ்ந்து ம ரணம்!!

1561

சின்னச்சாமி நல்லதம்பி..

வவுனியா வைத்து க டத்தப்பட்ட தனது மகனை தே டி போ ராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று (05.06.2020) காலை 10 மணியளவில் ம ரணமடைந்துள்ளார்.

வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற தந்தையே இன்று தனது வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து இறந்துள்ளார்.

மரணமடைந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் போ ராட்டத்தில் ஈடுபட்டுவந்த இவரது மகனான சசிதரன் 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோர் க டத்திச்சென்றிருந்தனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக போ ராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டு கா ணாமல் போன உறவுகளுக்காக குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.