வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் மாதம்தோறும் நடாத்தி வரும் மாதாந்தமுழு நிலா கருத்தாடல் நிகழ்வின் 158 வது நிகழ்வாக தமிழ் திரை இசைஉலகின் முடிசூடாமன்னன் ரி.எம்.
சௌந்தரராஜனின் நினைவு நிகழ்வு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா சுத்தானந்த இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் காலை பத்து மணிக்கு நடை பெறவுள்ளது.
வரவேற்புரையினை சி.நாகராஜா அவர்கள் வழங்க சௌந்தரராஜன் பற்றிய நினைவு குறிப்பினை நா.தியாகராஜா அவர்கள் வழங்கவுள்ளார். விசேட நிகழ்வாக இசை செல்வர் ,கலா பூஷணம் ஈழத்து சௌந்தரராஜன் இ.சிவசோதி அவர்களால் காலத்தால் அழியாத சௌந்தரராஜனின் பாடல் இசை நிகழ்வாக நடைபெறவுள்ளது.