வவுனியாவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!!

1200


அதிகூடிய மழைவீழ்ச்சி..



வவுனியாவில் நேற்று காலை முதல் இன்று காலை வரையான கடந்த 24 மணிநேரத்திற்குள் 138.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி சதானந்தன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இவ்வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் மாதம் பத்தாம் திகதி வரையான காலப்பகுதியில் 886.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.




இருந்தும் இவ்வருடத்திற்குள் இம்மாதத்தின் கடந்த 24 மணிநேரத்திற்குள் பதிவாகியதே அதிகூடிய மழைவீழ்ச்சி என அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணியரையான கடந்த 24 மணிநேரத்திற்குள்,


வவுனியாவில் 138.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மழையுடனான காலநிலை நீடிப்பதுடன் மாலை வேளைகளில் பெய்யும் மழை தொடர்ச்சியாக இருக்காது.

ஓரிரு நாட்களே மழை தொடர்ச்சியாக பெய்யும். இருந்தும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.