பூபதி பாண்டியன் இயக்கத்தில், விஷால்- ஐஸ்வர்யா அர்ஜூனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பட்டத்து யானை.
இப் படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய விஷால், மலைக்கோட்டை படத்தில் நடித்த போதே பட்டத்து யானை குறித்து நானும், பூபதி பாண்டியனும் யோசித்து வைத்திருந்தோம்.
ஆனால் அதற்கான நேரம் இப்போதுதான் அமைந்திருக்கிறது.
சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இணைகிறோம். பட்டத்து யானை படம் முழுநீள நகைச்சுவை படமாக மட்டுமின்றி கமர்ஷியல் படமாகவும் இருக்கும்.
ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இது முதல் படம், ஆனால் அவர் ஏற்கனவே பல படங்களில் நடித்ததை போன்றதொரு அனுபவம் இதில் தெரியுது.
ஒரு படத்தின் நாயகன், நாயகிக்கு மட்டும் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கணும்னு கிடையாது.
அந்தப் படத்தோட நாயகன், இயக்குனருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருந்தாலே படம் ஹிட்டாகும் என்று தெரிவித்தார்.
விழாவில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், ஆர்யா, பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், பட தயாரிப்பாளர் கேயார், இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மயில்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.