கிசுகிசுவை ஊதி அணைக்கும் முயற்சியில் பிந்து மாதவி..!

432

சினிமாவில் பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக தங்களை பற்றி தாங்களே கிசுகிசுக்களை பரவ விடுகின்றனர்.
ஆனால் ஒருசிலரை பற்றி தானாகவே கசிந்து விடும்.

மேலும் தொடர்ந்து ஒரே நடிகருடன் நடித்தால் சொல்லவே வேண்டாம், உடனே கொளுத்தி போட்டு விடுவார்கள்.

இதே போன்று தான் பிந்து மாதவி- விமல் பற்றி கிசுகிசுக்கள் பரவி வருகிறது.

இதுபற்றி பிந்து மாதவி கூறுகையில், இதற்கு முன்பு களவாணி, கலகலப்பு படங்களில் ஓவியாவுடன் நடித்து வந்ததால் அவரையும், விமலையும் இணைத்து செய்திகள் வந்தன.

தற்போது நான் இரண்டு படங்களில் நடித்து விட்டதால், என்னைப் பற்றியும் வருகிறது.

சினிமாவில் இதெல்லாம் சகஜமான ஒன்று தான், ஆனால் அதை எக்காரணத்தை கொண்டும் தொடரவிடக் கூடாது.

காரணம், மற்ற ஹீரோக்கள் இதை உண்மை என நம்பி நம்மை தவிர்க்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தற்போது இந்த கிசுகிசுவை ஊதி அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் விமலுடன் நட்பு ரீதியில் சினிமா விழாக்களுக்கு ஒன்றாக வருவதைக்கூட நிறுத்தி விட்ட பிந்து மாதவி, மற்ற ஹீரோக்களின் படங்களில் கவனம் செலுத்த போவதாக கூறுகிறாராம்.