இலங்கையில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!!

897


கொரோனா..



இலங்கையில் மேலும் 39 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1566 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 547ஆக அதிகரித்துள்ளது.




இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 30,267 பேர் சிகிச்சைகளை பெற்று வரும் அதேவேளை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 714 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.