காலநிலை குறித்து நாட்டில் பல இடங்களுக்கு சிவப்பு எச்சசரிக்கை!!

2166


காலநிலை குறித்து…



நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (குறிப்பாக மேற்கு, சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில்) நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதன்படி, 150 மில்லி மீற்றருக்கு அதிக வீழ்ச்சி இன்று சில இடங்களில் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.


மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.