முத்தமிட்ட பெண் மரணம்: ராகுல் மீது பொலிசில் புகார்..!

455

Rahul-Gandhiமுத்தமிட்ட பெண் தீக்குளித்து மரணமடைந்ததால் ராகுல் காந்தி மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அசாமில் ஜோரத் என்ற இடத்தில் கடந்த மாதம் 26ம் திகதி பெண்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பொண்டி சுட்டியா என்ற இளம்பெண், அவரது கன்னத்தில் முத்தமிட்டார். அந்தக் காட்சி, தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்பட்டது. இதையடுத்து வீடு திரும்பிய அவருக்கும், அவரது கணவர் சோமேஷ்வர் சுட்டியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனம் உடைந்த பொண்டி சுட்டியா தீக்குளித்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில், அந்தப் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராகுல் காந்தி, அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய், மாநில காங்கிரஸ் தலைவர் புவனேஷ்வர் கலிதா ஆகியோர் மீது ‘நரி முக்தி சங்கராம் சமிதி’ என்ற அமைப்பு ஜோரத் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தது.

இதுகுறித்து மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு அமன்ஜித் கவுர் கூறுகையில், புகார் தொடர்பாக பொலிசார் பரிசீலிக்கின்றனர் என்றும் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.