வவுனியாவில் இரு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!!

385

arrestவவுனியா சிறீராமபுரம் பிரதேசத்தில் இரு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் நேற்றையதினம் இரவு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த நான்கு தினங்களாக தொடர்ச்சியாக இராணுவத்தினரும், பொலீசாரும் இணைந்து வவுனியா பிரதேசமெங்கும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு காணப்படுகின்றது.

இந்த நிலைமையில் நேற்றையதினம் மாலை 7.00 மணியளவில் எஸ். லோகநாதன் என்பவர் வவுனியா நகரப் பகுதியில் வைத்து அரச புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறீராமபுரத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்த புலனாய்வுத் துறையினர் அவருடைய மனைவி மகேஷ்வரி மற்றும் அவரது இரு பிள்ளைகளான 08வயதுடைய பாரதிகண்ணன், 06வயதுடைய கண்ணன் ஆகியோரையும் கைது செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

நன்றி: “அதிரடி” இணையம்
http://www.athirady.com/tamil-news/news/345200.html