வவுனியா மாவட்டத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை முன்னெடுப்பு!!

1424

பேருந்து சேவை..

கொவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவை மாணவர்கள் , அத்தியாவசிய தேவை , தொழில் புரிவோரின் வசதி கருதி (அவர்களுக்கு மாத்திரம்) குறித்த பேருந்து சேவை இன்று முதல் நாடளாவிய ரீதியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவைகள் இன்று காலை தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் இச் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து கொழும்பு, கண்டி, அக்கரைப்பற்று , திருகோணமலை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தன.