விபத்து..
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற போது ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தவர்களில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற இருந்த புதல்வியின் பதிவுத் திருமணத்திற்காக வவுனியா, தோணிக்கல் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் கல்கமுக பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை (18.11) வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் வாகன சாரதி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 உள்ளடங்களாக 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மூவர் அனுராதபுரம் வைத்தியசாலையிலும், மூவர் கல்கமுக வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 22 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஏனையவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் கல்கமுக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.