வவுனியாவில் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் இறுதிக்கிரியை!!

3298

யதுர்சியின் இறுதிக்கிரியை..

வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து கடந்த (30.05.2022) அன்று இரவு சடலமாக மீட்கப்பட்ட 16 வயதுடைய சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் இறுதிக்கிரியை இன்று (02.06.2022) மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

சிறுமியின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் நிலவியதனையடுத்து சிறுமியின் சடலம் வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிறுமி உடற்பகுதிக்குள் அதிகளவில் நீர் சென்றமையினால் மூச்சுதினரல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதுடன்,

சிறுமியின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது எவ்வித தடயங்களோ காணப்பட்டவில்லை என சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவித்துடன் நேற்று (01.06.2022) மாலை சிறுமியின் சடலத்தினை உறவினரிடம் ஒப்படைந்தார்.

இந்நிலையிலேயே சிறுமியின் இறுதிக்கிரியை இன்று கணேசபுரம் பகுதியில் சிறுமி வசித்து வந்த மாமாவின் வீட்டில் இடம்பெற்று பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கண்ணீருக்கு மத்தியில் கணேசபுரம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த (30.05.2022) அன்று மாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது மாணவியின் சடலம் பராமரிப்பற்ற கிணற்றில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.