வவுனியாவில் கறுப்புச் சந்தையில் 3000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ள பெட்ரோல விலை!!

1278

பெட்ரோல் 3000 ரூபாய்..

வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெட்ரோல் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வவுனியாவில் எரிபொருள் விநியோகம் முறையான கட்டமைப்பின் கீழ் இல்லாமையினால் எரிபொருள் மாபியாக்கள் பெட்ரோலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக பெற்று அதனை 3000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

எரிபொருள் விற்பனை மாபியாக்களின் செயற்பாடு காரணமாக எரிபொருள் அவசியமானவர்கள் கூட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சீராக சென்று பெட்ரோல் பெற முடியவில்லை எனவும், கறுப்பு சந்தை வியாபாரிகள் குறித்த வரிசைகளில் புகுந்து எரிபொருளை பெற்று விற்பனை செய்து வருகின்றனர் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரதேச செயலகத்தால் ஒன்லைன் பதிவு இடம்பெறுகின்ற போதும் அது வவுனியா மாவட்டத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தபடவில்லை. இதனால் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.