சரஸ்வதி சிலை திறப்பு..
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் கல்வி தெய்வத்தின் சிலை திறப்பு விழா பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இத் திருவுருவச்சிலை அமரர் கிருஸ்ணபிள்ளை இலட்சுமி அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தினரினால் அமைக்கப்பட்டது.
சிலை திரைநீக்கம் செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர் இணைந்திருந்தனர்.