வவுனியாவில் இரு கண் பார்வையையும் இழந்த குடும்பத்திற்கு சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தால் வீடு : அடிக்கல் நாட்டி வைப்பு!!

915

சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தால்..

இலங்கை சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் வவுனியா பிரதேச செயலக பிரிவிலுள்ள இராசேந்திரன்குளம் கிராமத்தில் வசித்து வருகின்ற விசேட தேவைக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இரு கண் பார்வையையும் இழந்த செல்வக்குமரன் சஞ்சீவன் என்பவருக்கு இவ்வீடு நிர்மாணக்கப்பட்டு வளங்கப்பட உள்ளது. இவருடைய மனைவியும் கண் பார்வை குறைபாடு உடையவராக உள்ளார்.

ஒரு வயது குழந்தை பிள்ளையும் இவர்களுக்கு உள்ளார். கைக்குழந்தையுடன் வசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்ட இவர்களுக்கு இது மிக அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன், இலங்கை சத்திய சாய் நிறுவனங்களின் வடமத்திய பிராந்தியத்திற்கான இணைப்புக் குழுவின் தலைவர் அ.தவீசன், வவுனியா சத்திய சாயி சேவா நிலையத்தின் தலைவர் வி.ஜெயசோதி , சேவை இணைப்பாளர் கே.சிவகுமார்,

வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி சஜிவன், சமூக சேவைகள் உத்தியோகத்தர் ந.பாலகுமாரன் , இராசேந்திரன்குள கிராமசேவகர் ப.பிரதீப் , சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கௌசல்யா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.