வவுனியா பம்மைமடுவில் திண்மக் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டம்!!

528

திண்மக் கழிவுகளை..

வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் அமைந்துள்ள திண்மக் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டம் ஐ.நா சபையின் இணை நிறுவனம் யுனொப்ஸ் (unops) மூலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன் முதற்கட்டமாக திட்டமிடல் மேற்கொள்வது தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்கு பம்பைமடு திண்மக் கழிவுகள் அமைந்துள்ள பிரதேசத்தை நேரில் சென்று யுனொப்ஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதன் போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா, வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு ரதீஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் அருளானந்தம் , நகரசபை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் சென்றிருந்தனர்.