வவுனியாவில் தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனிக்கு போக்குவரத்துப் பொலிசார் இடையூறு!!

831


தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனி..



வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனிக்கு போக்குவரத்து பொலிசார் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.



தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்ற ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்து யாழ் நல்லூர் நோக்கி செல்கின்றது.




5 ஆம் நாளான நேற்றும் (19.09), 6 ஆம் நாளான இன்றும் குறித்த திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவின் பல்வேறு கிராமங்களுக்கு சென்றிருந்தது. இதன்போது மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகனம் கண்டி வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணித்த போது கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் குறித்த ஊர்திப் பவனிக்கு இடையூறை ஏற்படுத்தி வாகனத்தை வழி மறித்து,

ஊர்திப் பவனி தொடர்பான விளக்கங்களை கேட்டதுடன், அதில் பயணித்தவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்திருந்ததுடன், சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் புகைப்படம் எடுத்ததன் பின் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.