வவுனியாவில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

942

கர்ப்பிணிப் பெண்களுக்கு..

வவுனியாவில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஹற்றன் நசனல் வங்கியின் நிதி பங்களில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள கேட்கோர் கூடத்தில் குறித்த நிகழ்வு நேற்று (28.09) இடம்பெற்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரிவுக்குட்பட்ட 20 கர்ப்பிணிப் பெண்களுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன், வைத்தியர் ஜெயதரன், வைத்தியர் யூட் பீரிஸ், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பிரியதர்சினி, ஹற்றன் நசனல் வங்கி முகாமையாளர், உதவி முகாமையாளர், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.