வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தினம்!!

853

சிறுவர் தினம்..

வவுனியா சிக்கன கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று (01.10) காலை 9 மணிக்கு சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களை மகிழ்விக்கும் விளையாட்டு நிகழ்வுகள், சிறுவர்களுக்கான போட்டிகள், சிறுவர்களின் கலை ஆக்கங்கள் என்பவற்றை வெளிப்படுத்தி இந் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது சிறுவர்களை பாராட்டி மகிழ்வித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சரத்சந்திர, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இந்திரா ரூபசிங்க, முன்னாள் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, சிக்கன கூட்டுறவுச் சங்க தலைவர் மற்றும் பணியாளர்கள், சிறுவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.