வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் : “சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா”?

625

கவனயீர்ப்பு போராட்டம்..

சர்வதேச சிறுவர் தினத்தில் காணாமல் போன தமது குழந்தைகளுக்கு நீதி கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (01.10.2022) காலை 11.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?, எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும் , இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள்,

சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா?, பாடசாலை சென்ற மாணவன் எங்கே போன்ற பல்வேறு கோசகங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.