வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தினம்!!

710

சிறுவர் தினம்..

வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறுவர் தினம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, சிறுவர் தினம் தொடர்பில் ஆசிரியர் சகாப்தீன், சிறுவர்களும் தற்போதைய போக்குகளும் தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெசீம் அவர்களும் கருத்துரைகளை வழங்கினர்.

அத்துடன், மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் பொருட்டு பாடல், கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், முட்டி உடைத்தல், பந்து பரிமாற்றம், குறி பார்த்து எறிதல், இசையும் அசைவும் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்,

ஒவ்வொரு நிகழ்விலும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.