வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற விஜயதசமி பூஜையும் ஏடு தொடக்கலும்!!

944

விஜயதசமி…

நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான இன்று (05.10) விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விஜயதசமி பூஜையும், ஏடு தொடக்குதலும் சிறப்பாக இடம்பெற்றது.

கல்வி, செல்வம், வீரம் வேண்டி சரஸ்வதி, லக்சுமி, துர்க்கை ஆகிய மூன்று தேவியருக்கும் நவராத்தி பூஜை இடம்பெற்று வந்தது. அந்த வகையில் நவராத்திரி பூஜையின் விஜயதசமி மற்றும் ஏடு தொடக்குதல் என்பன இடம்பெற்றன.

குறிப்பாக ஆலங்களில் காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் பெருமளவான மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கினர்.

வவுனியா, வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவசிறி ஜெ.மயூரக் குருக்கள் தலைமையில் விசேட அபிடேக ஆராதனைகள் இடம்பெற்று பக்தர்களின் அரோகரோ கோசத்திற்கு மத்தியில்,

மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆதி விநாயகர் திருக்கோவிலில் விசேட அபிசேகங்கள், பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ஆதி விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து வெளி வீதிக்கு காட்சி கொடுத்தார்.

தொடர்ந்து தமிழருவி த.சிவகுமாரன் அவர்களினால் சிறுவர்களுக்கு ஏடு தொடக்கி வைக்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.