வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞன் அதிரடியாக கைது!!

845

இளைஞன் கைது..

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் ஹெரோயினை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (11.10.2022) காலை மகாறம்பைக்குளம் கண்ணன்கோட்டம் பகுதியில் மடுகந்த விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, இவரை கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து 3 கிராம் 770மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும், 32 வயதுடைய மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்தவரை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.