வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி : 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி!!

1073

குளவி கொட்டு..

வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் இன்று (17.10.2022) காலை 8 மணியளவில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்பட்ட போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் காலைப் பிராத்தனையின் போது காற்றின் வேகம் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது தாக்கியுள்ளது.

இதனால் பாதிப்படைந்தவர்களில் 12மாணவர்கள் பதவியா பிரதேச வைத்தியசாலையிலும், 8 ஆசிரியர்கள் மற்றும் 12 மாணவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும், 03 மாணவர்கள் மடுகந்த பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக வன இலாகா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என அப்பிரதேசத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்திருந்தார்.