வவுனியாவில் பெண்ணை பின்தொடர்ந்து தாலியை அறுத்துச் சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

1501

இளைஞர்கள் கைது..

வவுனியா பொலிசாரின் துரித நடவடிக்கையால் குற்றச் செயல் தொடர்பில் இரு இளைஞர்கள் நேற்று (23.10) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, வைத்தியசாலைக்கு சென்ற பெண் ஒருவர் சிகிச்சை முடிந்தபின் நேற்று முன்தினம் (22.10) பிற்பகல் 2 மணியளவில் வீடு நோக்கி சென்ற போது பின் தொடர்ந்து சென்ற இரு இளைஞர்கள் வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த பெண் மஞ்சள் நூலில் அணிந்திருந்த ஒரு பவுண் தாலியினை அறுத்துச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில்,

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட், பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461),

உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் பூந்தோட்டம், மதீனாநகர் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையை இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,

அறுத்துச் செல்லப்பட்ட தாலி அடைவுக் கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.