வவுனியாவில் போலியான முகவரியுடன் பொதி செய்யப்பட்ட கோதுமை மா முகவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்!!

762

நீதிமன்றில் வழக்கு தாக்கல்..

வவுனியா மாவட்டத்தில் போலியான முகவரி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கமின்றி வவுனியா வர்த்தக நிலையங்களில் பொதி செய்யப்பட்ட கோதுமை மா விற்பனை முகவருக்கு எதிராக வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதிவு எதுவும் செய்யப்படாத போலியான பெயர் மற்றும் நிரந்தர தொலைபேசி இலக்கமின்றி, எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவரின் கைத்தொலைபேசி இலக்கத்துடன் கோதுமை மா பொதி செய்யப்பட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தமையுடன்,

உணவுப் பொருளை இவ்வாறு போலியான முகவரியுடன் விற்பனை செய்வதால் அதன் மூலம் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு எனவும் பொது மக்கள் கேள்வி எழுப்பியிருந்தமையுடன் வவுனியா ஊடக அமையத்தால் பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

ஊடக அமையத்தின் முறைப்பாட்டிற்கமைய விசாரணைகனை முன்னெடுத்த வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் குறித்த கோதுமை மா முகவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொண்டுள்ளனர்.