கவர்ச்சி பொம்மையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்: அஞ்சலி..!

412

கற்றது தமிழ், அங்காடி தெரு படங்களில் நடித்ததன் மூலம் திறமையான நடிகை என பெயர் எடுத்தவர் அஞ்சலி.
இதன் பின் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், கிளாமருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்தார்.

ஆனால் கிளாமர் செட் ஆகவில்லை, எனவே மீண்டும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க தயாராகி விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கவர்ச்சி பொம்மையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஆனால் நல்ல கதையம்சம் உடைய படங்கள் ஒரு சில நடிகைகளுக்கு தான் கிடைக்கும்.

அதுபோன்ற வாய்ப்புகள் எனக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி.

நான்கு பாடல்கள், இரண்டு காட்சிகளில் வந்து தலைகாட்டுகிற நடிகை என பெயர் எடுக்க விரும்பவில்லை.

அஞ்சலி என்றால் நல்ல படங்களில் நடிக்கும் நடிகை என ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.