யோகா பயிற்சிக்கு சென்ற மனைவி சடலமாக மீட்பு : கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

531

கோவையில்..

கோவை ஈஷா மையத்தில் இருந்து தலைதெறிக்க சாலையில் விறுவிறுவென ஓடிச் சென்ற பெண், அதன் பின்னர் காணாமல் போன நிலையில், 20 நாட்களுக்குப் பின்னர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்காக சென்றிருக்கிறார் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த பழனிக்குமாரின் மனைவி சுபஸ்ரீ (34). இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், ஈஷா யோகா மையத்தில் ஒருவார யோகா பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11-ம் தேதி காலை 6 மணிக்கு சென்றுள்ளார். பயிற்சி முடிவடைந்த நிலையில் டிசம்பர் 18-ம் தேதி அவரை அழைத்துச்செல்ல அவரது கணவர் பழனிக்குமார் காலை 7 மணிக்குச் சென்றுள்ளார்.

11 மணியாகியும் அவர் வராததால், உள்ளே சென்று விசாரித்துள்ளார். அப்போது வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்டதாக வரவேற்பாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பழனிக்குமார் ஆய்வு செய்த போது, சுபஶ்ரீ காலை 9.30 மணிக்கு மற்றொருவாசல் வழியாக வெளியே வந்து ஒரு டாக்சியில் ஏறி சென்றது பதிவாகி இருந்துள்ளது.

இதனால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கேயும் அவர் வரவில்லை. அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பழனிக்குமார் சுபஸ்ரீயை கண்டுபிடித்து தரவேண்டும் என்று 20-ம் தேதி ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரி

டிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட 6 தனிப்படைகள் அமைத்து, 100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த பெண் எப்படி மாயமானார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கிட்டத்தட்ட இரண்டு வாரம் கழித்துள்ள நிலையில், அதே செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது தோட்டத்திற்கு சொந்தமான கிணற்றில் இருந்து ஒரு பெண் சடலம் கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசி வருவதாகவும் தகவல் கிடைத்தது.

அந்த தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது சுபஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது. அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது. இதன் பிண்ணனி என்ன என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.