பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு… மனைவி பற்றி தெரிய வந்த ரகசியம் : கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1351

ராமநாதபுரத்தில்..

ராமநாதபுரம் மாவட்டம் அருகே பல்வேறு ஆண்களை காதலிப்பதை போல நடித்து பல லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு மோசடி செய்த பெண்ணின் செய்தி வைரலாகி வருகிறது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியின் செல்போனில் பல ஆண்களின் புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ந்துபோன கணவன் முகநூலில் பழகிய காதலிக்காக மதம் மாறி திருமணம் செய்து ஒரு மாதங்கள் கூட சேர்ந்து வாழாத நிலையில் சொகுசுக்கார், நகை உள்ளிட்ட பல லட்சங்களை இழந்து ஏமார்ந்து நிற்கும் வனச்சரகர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வனச்சரகர் முத்துராம் என்ற ஜவகர், இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வனச்சரக அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவர் ஏமாந்ததை போல தமிழகத்தில் பல பேர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். முத்துராம் ஏமார்ந்தது எப்படி என்று பார்க்கலாம்.

ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராம் ஒரு இந்து. வனச்சரக அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தபோது முகநூல் மூலமாக சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியைச் சேர்ந்த நசீனா ஷீபா பர்வீன் என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். நசீனா ஷீபாவுக்கு ‘ஹாய்’ மெசேஜை தட்டிவிட்டதும் உடனே நசீனாவிடம் இருந்து ரிப்ளை வந்துள்ளது.

தொடர்ந்து இருவரும் முகநூலில் பழகி வந்துள்ளனர். ரொம்ப நாளாக செல்போனிலே பேசிக்கொண்டிருந்தால் முத்துராமுக்கு நசீனாவை நேரில் பார்க்க ஆசை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இருவரும் பேசி நேரில் சந்திக்க முடிவெடுத்து பின்னர் ஒரு கட்டத்தில் முத்துராம் சின்ன திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்று நசீனாவை பார்த்துள்ளார் பின்னர் இருவருக்கும் பிடித்து போக இருவரும் திருமணம் செய்வதென முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், முத்துராமிடம் நசீனா தனக்கு கார் ஒன்று வேண்டும் என கூறியுள்ளார். நசீனா மீது வெறித்தனமாக ஆசை கொண்டிருந்த முத்துராம் உடனடியாக அவர் பெயரிலேயே கடனாக சொகுசுக் கார் ஒன்றை புக் செய்து வாங்கி பரிசாக வழங்கியுள்ளார்.

பின்னர் காதலிக்காக தன் வீட்டு எதிர்ப்பையும் மீறி இந்து மதத்திலிருந்து காதலியின் மதத்திற்கு முறைப்படி மாறியுள்ளார். மதம் மாறியவுடன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் சேலத்தில் உள்ள பள்ளிவாசலில் வைத்து இஸ்லாம் முறைப்படி திருமணம் நடந்தேறி இருக்கிறது.

ஒரு மாத காலம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் வனச்சரகர் முத்துராமிற்கு நசீனா மீது சந்தேகங்கள் எழுந்துள்ளது. பிறகு அவருடைய செல்போனிற்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ் வாயிலாக பல ஆண் நண்பர்கள் தொடர்பு கொண்டதை பார்த்திருக்கிறார்.

மேலும், நசீனாவின் செல்போனை ஆராய்ந்தபோது, தன்னை போலவே பல ஆண்களுடன் நசீனா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கண்டு அதிர்ந்து போனார்.

இதனை அடுத்து இவர்களுக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு முத்துராம் உடனே அங்கிருந்து பிரிந்து சென்றதாக தெரிகிறது. பின்னர் அவரிடம் தான் வழங்கிய ஹுண்டாய் கார் மற்றும் பிசினஸ் செய்வதாக கூறி பத்து லட்சம் கொடுத்ததாகவும்,

37 சவரன் நகையை அவருக்கு இவர் அணிவித்து இருந்ததாகவும் அதை திருப்பித் தருமாறு பலமுறை கூறியுள்ளார், ஆனால் திருப்பிப் தராத நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையத்தில் அவர் மீது புகார் மனு அளித்து தன்னிடம் ஏமாற்றி பறித்த கார் மற்றும் பணம் நகை உள்ளிட்டவகளை பெற்றுத் தருமாறு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் என்ற பெயரில் வனச்சரகரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணின் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நசீனா இதுபோன்று எத்தனை ஆண்களை ஏமாற்றியுள்ளார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.