கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு நடந்த பயங்கரம் : காதலனின் வெறிச்செயல்!!

291

கர்நாடகாவில்..

பார்க்காமலே காதல், பேசாமலே காதல் என்று இருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இனி அதை கதைகளில் மட்டுமே காணமுடியும் . இப்போதெல்லாம் சொல்பேச்சு கேட்கலன்னா அவளை வெட்டு, குத்து ,ரயிலில் தள்ளி கொலை செய், விஷம் வைச்சிடு, வெட்டி கூறு போட்டு நாய்க்கு போடு என பயங்கரமாக மாறி வருகிறது.

அதே போல் ஒரு சம்பவம் மீண்டும் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகா முல்பாகல் காஜிபுரா கிராமத்தில் வசித்து வருபவர் 19 வயது லயசிதா . இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் , கல்லூரிக்கு சொந்தமான விடுதியிலேயே தங்கி படித்து வருகிறார்.

நேற்று காலையில் அவர் வழக்கம் போல கல்லூரிக்கு வந்த லயசிதாவை பார்க்க வேறு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வரும் பவன் கல்யாண், பார்க்க வந்திருந்தார்.

இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த பவன் கல்யாண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லயசிதாவை பல இடங்களில் சரமாரியாக குத்தினார்.

அதே கத்தியால் பவன் கல்யாணும் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். கல்லூரியில் இருந்த சகமாணவர்கள், ஊழியர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு லயசிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பவன் கல்யாணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். காதல் விவகாரத்தில் லயசிதாவை கொலை செய்து விட்டு, பவன் கல்யாண் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 பேரின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பவன் கல்யாண் நிருபதுங்காவில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதுபற்றி கல்லூரி நிர்வாகம் விடுத்த செய்திக்குறிப்பில் பவன் கல்யாண் எங்கள் கல்லூரியில் படித்தாலும் முதலாம் ஆண்டு என்பதால் அவரை பற்றிய மற்ற தகவல்கள் தெரியவில்லை.

இதில் லயசிதா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அந்த கல்லூரியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாணும், லயசிதா இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறுகின்றனர். லயசிதாவின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் 2 சகோதரிகள் கதறி துடித்த காட்சி காண்பவர்களை கரைய வைத்தது.