கேரளாவில்..
உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். கேரள மாநிலம் கோட்டயம் அருகே கிளிரூரைச் சேர்ந்தவர் ரேஷ்மி (33). கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பியல் பிரிவில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.
சமீபத்தில், கோட்டயத்தில் உள்ள ‘மலப்புரம் மந்தி’ என்ற ஹோட்டலில் அல்பாம் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு உணவு ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.
உடனே அவர் டிசம்பர் 31 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரேஷ்மி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான காரணத்தை அறிய முடியும் என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக இந்த ஹோட்டலில் இருந்து உணவு அருந்திய 15க்கும் மேற்பட்டோர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறி விடுதியை மூடினர்.