அப்பாவை நல்லா பார்த்துக்கோ.. செல்போனில் வீடியோ பதிவிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!!

274

தமிழகத்தில்..

தமிழகத்தில் பெண்ணொருவர் செல்போனில் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி செல்வம் (50) – சிவகாமி (45).

இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். கீர்த்தனாவுக்கு திருணமாகி திருச்செங்கோட்டில் வேறு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு கீர்த்தனா தாயார் சிவகாமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்காததால் தந்தை செல்வத்திற்கு போன் செய்தார்.

இதையடுத்து செல்வம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிவகாமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்த அவர் மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த போது சிவகாமியின் செல்போனில் சுமார் 9 நிமிடம் பேசும் வீடியோ பதிவு இருப்பதை கண்டுபிடித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் சிவகாமி நகையை வைத்து பணம் வாங்கியதாகவும், அதற்கு பெரும்பகுதி பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும், ஆனால் மீதி பணத்தை கேட்டு அந்த பெண் அடிக்கடி நெருக்கடி கொடுத்ததாக இருந்தது.

மேலும் தனது மகனிடம் அப்பாவை நன்றாக பார்த்து கொள்ளுமாறும் வீடியோவில் இருந்தது. இதையடுத்து வீடியோவில் கூறிய பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.