மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

316

விழுப்புரத்தில் ..

விழுப்புரம் அருகே உள்ள பொன்னங்குப்பத்தில் மனைவி பிரிந்த சோகத்தில் மதுபோதைக்கு அடிமையாகி கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகேயுள்ள பொன்னங்குப்பத்தை சார்ந்த வினோத்குமார் என்ற இளைஞருக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு மற்றும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் மனைவி சூர்யா வினோத்குமாரை பிரிந்து கடந்த ஒருவருடமாக தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

மனைவி பிரிந்ததால் மது போதைக்கு அடிமையாகினார். இந்தநிலையில், வினோத்குமார் பொன்னங்குப்பத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிணற்றில் பிணமாக மிதப்பதை கண்ட அப்பகுதியினர் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டனர்.

அதில் மனைவி பிரிந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.