12 வயது சிறுவன் பரிதாபமாக மரணம் : கதறியழும் பெற்றோர்!!

337


கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, சமீபகாலமாக 25 வயதினருக்கே மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது.



ஆனால் அதை விட மோசமான சம்பவம் ஒன்று கர்நாடகாவில் நடந்துள்ளது. மடிகேரி மாவட்டம் கூடுமங்களூரை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி. இவர் பாடசாலை பேருந்து ஓட்டுநரான பணியாற்றி வருகிறார். இவரது மகன் கீர்த்தன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.





கடந்த சனிக்கிழமை அன்று கீர்த்தனை தனது நண்பர்களுடன் மாலையில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நெஞ்சில் வலி இருப்பதாக கூறிய அவர், உடனேயே கீழே மயங்கி விழுந்துவிட்டார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.


மேலும் சிறுவனின் மரணத்திற்கு காரணம் மாரடைப்பு தான் என உறுதி செய்தனர். 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.