ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

334

இந்தியாவில்..

தமிழகத்தின் தலைநகர் சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (34). என்ஜினீயரான இவர் கார் கம்பெனியில் வாகன வடிவமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிந்தூரா ஐதராபாத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். தம்பதியின் மகள் ஆதியா (4) பிரதாப்பின் தாய் ராஜாத்தி.

சிந்தூரா பணியின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடி பெயர்ந்தனர். அங்கு சிந்தூரா அவரது குழந்தை ஆதியா மற்றும் பிரதாப்பின் தாய் ராஜாத்தி ஆகியோர் தங்கி இருந்தனர். பிரதாப் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொங்கல் விடுமுறை காரணமாக பிரதாப் ஐதராபாத் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம் பிரதாப் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு அறையிலும், சிந்துரா, ஆதியா, ராஜாத்தி ஆகியோர் மற்ற அறைகளிலும் இறந்து கிடந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் நான்கு சடலங்களையும் கைப்பற்றினார்கள். முதற்கட்ட விசாரணையில் பிரதாப் அவரது மனைவியை சென்னைக்கு இடமாற்றம் செய்து வரும்படி கூறியதால் இருவருக்கும் இடையில் தகராறு இருந்தது தெரிந்தது.

மேலும் பணப்பிரச்சனையிலும் குடும்பத்தார் தவித்து வந்தனர். இதையடுத்து நான்கு பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்டது. இது குறித்து பேசிய சிந்துரா தாயார் கூறுகையில், மூவரையும் கொலை செய்துவிட்டு பிரதாப் தற்கொலை செய்திருக்கிறார் என்றார்.

இந்தநிலையில் பிரதாப் தனது மனைவி, மகளை முதலில் கொன்றுவிட்டு, பின்னர் தனது தாயாரை கழுத்தை நெரித்து கொலை செய்து பிறகு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். தொடர்ந்து இது தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.