மனைவி தற்கொலை : மனைவியின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன்!!

262

விருதாச்சலத்தில்..

குடிப்பழக்கத்தை கைவிட கூறி கணவனுடன் ஏற்பட்ட தகராறு மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து மனைவியின் வீட்டை கணவன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் கேயிச்சியால் (22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து அவர்கள் பெண் வீட்டின் அருகிலேயே அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் இப்படி இருக்க விக்னேஷ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் குடிபோதையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அவர் தன் மனைவியிடம் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை அதனால் உனக்கு சேர வேண்டிய சொத்தை வாங்கி வா என மனைவியிடம் கூறி தகராறு செய்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வழக்கம் போல மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

அவரது மனைவி, குடிப்பழக்கத்தை கைவிட கூறி பலமுறை சொல்லியும் கேட்காததாலும் அடிக்கடி குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாலும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் வீட்டிலேயே தூக்கி தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தங்கி இருந்த வீட்டை விக்னேஷ் பெட்ரோல் ஊற்றி வீட்டை எரித்து விட்டு சென்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக வீடு எரியும்போது உறவினர்கள் யாரும் அந்த வீட்டில் இல்லாமல் அருகில் இருந்த வீட்டின் தங்கி இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து காவல் துறையினர் விக்னேஷை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

அதனால் விருதாச்சலம் காவல் துறையினர் இந்த வழக்கை சந்தேக மரணம் என பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையாகவே பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.