திடீரென கட்டுக்கட்டாக கொட்டிய பணமழை : பணத்தை குதூகலத்துடன் அள்ளி சென்ற மக்கள்!!

427

பெங்களூரில்..

பெங்களூரில் உள்ள மார்க்கெட் பகுதியில் திடீரென பணமழை பெய்துள்ள சம்பவம் இப்போது வைரலாகி வருகின்றது. பணம் மழை மழையாக கொட்டும் என கேள்விப்பட்டிருப்போம் அப்படியில்லையென்றால் கனவிலும், சினிமாவிலும் தான் பார்த்திருப்போம்.

ஆனால் இந்தியாவில் ஒரு இடத்தில் பண மழை மழையாக கொட்ட அதில் மக்கள் நனைந்திருக்கின்றனர். பெங்களூரில் நகரின் டவுன்ஹால் பகுதியிலுள்ள கே.ஆர் மார்க்கெட்டின் மேம்பாலத்தில் தனது வானகத்தை நிறுத்தி கழுத்தில் பெரிய சுவர் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு கையில் பணக்கட்டுடன் நடந்துவருகிறார் ஒருவர்.

பின்னர் மேம்பாலத்திலிருந்து தனது சூட்கேஸிலிருந்து கீழே பணத்தை அள்ளி வீசுகிறார். அந்த நபர் பணத்தை கீழே பறக்கவிட்டுவிட்டு தானும் அங்கிருந்து பறந்துவிட்டார்.

காற்றில் பறந்த பணத்தை எடுக்க மக்கள் அங்குமிங்கும் ஓடியதால் மார்க்கெட் பகுதியில் கொஞ்ச நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.