திருமணமான சில மாதங்களில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

342


நாமக்கல்லில்..



நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்தர். இவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அபிராமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.



திருமணம் ஆன சில நாட்களிலேயே ராகவேந்தரின் தாய் மற்றும் சகோதரி இருவரும் சேர்ந்து அபிராமிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்து மூன்று மாதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அபிராமி அவரது தந்தை வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.




நேற்றும் வழக்கம் போல வேலைக்குச் சென்ற அபிராமி உடல் நலம் சரியில்லாததாக கூறி வீட்டிற்கு வந்த நிலையில் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து அபிராமி குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அபிராமி குடும்பத்தினர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று அவரது சடலத்தை கண்டு கதறி அழுந்துள்ளனர்.

இதனை அடுத்து ராகவேந்தர் குடும்பத்தினர் கொடுத்த மன உளைச்சலின் காரணமாகவே அபிராமி தற்கொலை செய்து கொண்டதாகவும் தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அபிராமியின் தந்தை மற்றும் சகோதரி உட்பட உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈரோடு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிபாளையம் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை இருப்பதாக காவல் துறையினர் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க அபிராமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது இறப்பிற்கு கணவரின் தாய் மற்றும் சகோதரி தான் காரணம் என கூறி வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா நேரில் சென்று ஆய்வு செய்து மருத்துவமனையில் இரு தரப்பு குடும்பத்தினர் மற்றும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அபிராமி பேசிய வீடியோ பதிவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதனை அடுத்து அபிராமியில் உறவினர்கள் அவரது சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்யக்கூடாது எனக் கூறி பிரேத அறையில் புகுந்து ரகலையில் ஈடுபட்டனர். திருமணமான ஒரே வருடத்தில் இளம்பெண் தனது தற்கொலைக்கு,

கணவரின் குடும்பத்தார் காரணம் எனக்கூறி வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இளம் பெண்ணின் குடும்பத்தினர் மத்தியிலும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.