வவுனியா செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டவராவார். அவரிடம் இருந்த ரி56 துப்பாக்கி ரவகைகள் 13 உடன் 1005 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரனைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.