வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவன் திருபூ.இந்திரன் அவர்களினால் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழா நேற்று (10.07) பாடசாலை திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சரஸ்வதி சிலை திரு பூ.இந்திரன் அவர்களின் தாயார் திருமதி பூபாலபிள்ளை சரஸ்வதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் வவுனியா வடக்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி பராசக்தி கணேசலிங்கம், முன்னாள் வவுனியா பிரதேச செயலார் திரு.ஐயம்பிள்ளை, மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.