வவுனியாவின் குடியிருப்பு சித்தி விநாயகர் தேர்த் திருவிழா நேற்று(11.07) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
காலை 5.30 மணியில் இருந்து விசேட அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகி பூஜை வழிபாடுகளின் பின்னர் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று காலை 9 மணிக்கு சுவாமி தேரேறி வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
க.கந்தசாமி குருக்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.