வவுனியா ஓமந்தைப் பகுதியில் இன்று(14.05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று அதிகாலை நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மீன்களை ஏற்றும் வாகனம் ஒன்று ஓமந்தைப் பகுதியில் தனது வேகக் கட்டுப்பாட்டை மரத்துடன் மோதியதில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். அத்துடன் வாகனமும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-கலை-






