வடமாகாண இஸ்லாமிய காலசார போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் குறித்த நிகழ்வு நேற்று (19.07) பாடசாலையில் இடம்பெற்றது. வடமாகாண இஸ்லாமிய கலாசார விழாவானது நேற்று முன்தினம் (18.07) முருங்கன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது களிகம்புக் கலை கோலாட்டம் போட்டியில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களான ஆர்.எம்.அர்க்கம், ஏ.எம.சியா, என்.எம்.றிஸ்னி, என்.றிஸ்கான், எப்.எம்.பசால், என்.எம்.முப்தி, ஆர்.எம்.இமாஸ், எம்.எம்.பாசித், எச்.எம்.ஹஸ்னி ஆகிய மாணவர்கள் 2ம் இடத்தையும், கிராத் போட்டியில் அதே பாடசாலை மாணவி ஜே.ஜெனீரா 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது குறித்த மாணவர்கள் வெற்றியாளர் என பட்டி அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.