வவுனியாவில் 900 தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய பொலிசார் தொடர்ந்தும் களத்தில்!!

941

வடமாகாணத்தில் அதி கூடிய தேர்தல் சுவரொட்டிகளை வவுனியா பொலிசார் அகற்றியுள்ளதுடன், தொடர்ந்தும் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் இன்றும் (18.09) தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா நகரம், குருமன்காடு, திருநாவற்குளம், யாழ்வீதி, தாண்டிக்குளம், நகரப்பகுதி என்பவற்றில் வலம் வந்த பொலிசார் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை அகற்றினர்.

தேர்தல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த தேர்தல் திணைக்களம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரை நடைவடிக்கைளுகம் நிறைவடையும் நிலையில் பொலிசார் இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, 9000 வரையிலான தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்தில் வவுனியாவிலேயே அதிக சுவரொட்டிகள் அகற்றபட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.