வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் கனடாவில் பரிதாபமாக உயிரிழப்பு!!

3040

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று (04.01.2025) தேவை நிமிர்ந்தம் வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர், கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இளைஞனின் மரணம் கனடா வாழ் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.