வவுனியாவில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தமிழர்களின் தை திருநாளாம் பொங்கல் தினமான இன்று மக்கள் தங்கள் வீடுகள் வர்த்தக நிலையங்களை அலங்கரித்து புத்தாடை அணிந்து தைப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழைக்கு மத்தியிலும் வவுனியா கந்தசாமி ஆலயம், வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம், தாஸ்கோட்டம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் உட்பட வவுனியாவில் பல ஆலயங்களில் பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வீடுகள், கடைகளிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
சூரிய பகவானை தைத் திருநாளிலே வழிபடும் முகமாக அதிகாலையிலே பொங்கலுக்குரிய வேலைகளை முடித்து சூரிய பகவான் காலையில் எழுந்துவரும் வேளையில் பொங்கல் படைத்து விசேட வழிபாடுகள் செய்வது தமிழர் பண்பாடாகும்.
இன்று நடைபெற்ற தை திருநாள் நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சூரிய பகவானுக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.