வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு!!

2525

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.02) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.


வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தவறான முடிவெடுத்தே அவர் மரணமடைந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

26 வயதுடைய தனுசன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். இது தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.