வவுனியாவில் 40 பரீட்சை நிலையங்கள், 4396 மாணவர்கள் : க.பொ.த.சாதாரண பரீட்சை இன்று ஆரம்பம்!!

819

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியதுடன், எதிர்வரும் 26ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள இரு வலயங்களில் இருந்தும் இம்முறை 4396 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

அவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 2405 பேரும்,தனியார் பரீட்சார்த்திகள் 1991 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவுத்துள்ளது.

இம்முறை பரீட்சைக்காக வவுனியாவில் 40 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் குறித்த பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் இம்முறை தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.