வவுனியாவில் தமிழரசுக்கட்சியால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

1232

தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (16.05.2025) மதியம் இடம்பெற்றது.

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.