வவுனியாவில் கடும் காற்றினால் மரம் முறிந்து வீட்டின் கதவு வேலிகள் தேசம் : போக்குவரத்தும் ஸ்தம்பிதம்!!

1221

இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் வவுனியாவில் வீட்டின் கதவு வேலிகள் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் நேற்று மதியம் வீதியோரமாக நின்ற மரம் முறிந்து வீழ்ந்ததில் வீட்டின் வேலியின் தகரங்கள் சேதமடைந்துள்ளது.

அதோடு மற்றைய வீடு ஒன்றின் பிரதான வாயில் கதவும் சேதமடைந்துள்ளதுடன் மினசாரமும் தடைப்பட்டது.

அது தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் மின்சார சபைக்கு வழங்கிய தகவலையடுத்து மின்சார சபையினர் மின்சார தடையினை நிவர்த்தி செய்தமையுடன் பிரதேச சபையினர் மரத்தினை அகற்றி போக்குவரத்தினையும் சீரமைத்தனர்.